தமிழகத்தில் அக்.30 ( நாளை) மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் அக்.30 ( நாளை) மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் அக்.30 ( நாளை) மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் அக்.30 ( நாளை) மதுக்கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் இருந்து சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். இவரது ஜெயந்தி விழா தமிழகத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமநாதபுரத்தில் மதுக்கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுக்கடைகள்:

தமிழகத்தில் நாளை பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குருபூஜை விழாவில் பங்கேற்கும் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ராமநாதபுர மாவட்டம் கமுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் மட்டும் 94 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

நாளை நினைவிடத்திற்கு செல்லும் வாகனங்கள் முறையான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் இயங்கும் பேருந்துகளின் போக்குவரத்து பாதைகள் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையிலும், கலவரங்களை தடுக்கும் வகையிலும் மதுக்கடைகளை இன்று (அக்.29) மூட உத்தரவிடப்பட்டிருந்தது.

சென்னையில் மழை கால பாதிப்பை தடுக்க நடவடிக்கை – சென்சார் மூலம் கண்காணிப்பு!

Follow our Instagram for more Latest Updates

அதே போல் நாளையும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு தேனியில் இருந்து ராமநாதபுரம் செல்ல கூடிய தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் 36 மதுக்கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இந்த மாதம் காந்தி ஜெயந்தி, மிலாடி நபியை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!