தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்வு? வெளியான தகவல்!
தமிழகத்தில் ஊரடங்கு காலத்திற்கு பின்னர் மதுபானங்களின் விலை உயர இருப்பதால், பழைய விலையில் உள்ள மதுபானங்களை விற்று முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விலை உயர்வு:
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் கடந்த மே மாதம் முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் பல தடைகளையும் அரசு அறிவித்தது. அரசு டாஸ்மாக் மது விற்பனை கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்து. தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த காரணத்தால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 22 மின்தடை ஏற்படும் பகுதிகள்!
கடந்த 50 நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் பிரீமியம் வகையை சேர்ந்த மதுபானங்களை விற்பனை செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் 100 மற்றும் 150 ரூபாய் மதுபானங்கள் அனைத்தும் விற்று விட்டது. 200 ரூபாய்க்கு மேல் உள்ள மதுபானங்கள் மட்டுமே இருப்பில் உள்ளது. இதனை வலுக்கட்டாயமாக வாடிக்கையாளர்களுக்கு விற்று வருகின்றனர். இதனால் மதுபானக்கடைகளில் தகராறுகள் எழுந்து வருகின்றது.
TN Job “FB Group” Join Now
மதுபானங்களின் விலை உயர்வடைய போவதால் மட்டுமே பழைய இருப்புகளை விற்று வருகின்றனர் என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது. இது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ரெங்கநாதன் அவர்கள்,கொரோனா ஊரடங்கு காரணமாக மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து சரக்கு வரத்து குறைந்துள்ளது. ஓரி வாரத்திற்கு குறிப்பிட்ட அளவிலான சரக்குகளை மட்டுமே அனுப்புகின்றனர். இதனால் தான் இருப்பில் உள்ள மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த தட்டுப்பாடு குறைந்து விடும். விலை உயர்வு குறித்த அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளிவரவில்லை என்று கூறியுள்ளார்.