தடுப்பூசி செலுத்திக் கொண்டோருக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அவர்கள் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
டாஸ்மாக் மதுபானம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் தாக்கம் சமீப வாரங்களில் குறைந்து வருகிறது. நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தொடர்ந்து தொற்றின் தாக்கம் குறைந்து வந்தமையால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு மாவட்ட ஆட்சியர்கள் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்டம் – ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற திட்டம்!
அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னை, கோவையில் தினசரி பாதிப்பு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகம் முழுவதும் கொரோனா எதிரான தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சென்னையில் ஒரே நாளில் அனைத்து தொகுதிகளிலும் 400 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்துவதற்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்தது. இதனால் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நீலகிரியில் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தார். இதுவரை நீலகிரியில் 97% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படும் என்றும், தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்பனை இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக டாஸ்மாக்கில் கொரோனா தடுப்பூசிக்கான சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டை காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.