PSG கிளப் உடனான ஒப்பந்தத்துக்கு தயாரான லியோனல் மெஸ்ஸி – ரசிகர்கள் உற்சாகம்!
கால்பந்து உலகின் நட்சத்திரமாக திகழும் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து கிளப்பில் இணைவதற்கான உடன்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அணி மாற்றம்
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த லியோனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸி, அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் ஒரு முக்கியமான வீரரும், சிறந்த கேப்டனாக கருதப்பட்டவர். அர்ஜென்டினாவின் தொழில்முறை கால்பந்து வீரரான இவர் ஆறு பலோன் டி’ஓ விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா கால்பந்து கிளப்பிறகு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியதாகும். அந்த அணிக்காக இதுவரை பத்து லா லிகா பட்டங்கள், ஏழு கோபா டெல் ரே பட்டங்கள் மற்றும் நான்கு UEFA சாம்பியன்ஸ் லீக்குகள் உட்பட 35 கோப்பைகளை வென்றுள்ளார்.
வங்கி ஊழியர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை – RBI அறிவிப்பு!
தவிர பார்சிலோனா கிளப் மற்றும் நாட்டிற்காக 750 க்கும் மேற்பட்ட கோல்களை அடித்துள்ள ஒரு பெருமைக்குரிய சாதனையாளர் இந்த மெஸ்ஸி. தற்போது 34 வயதான லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா அணியில் கிட்டத்தட்ட 21 ஆண்டுகள் தனது பங்களிப்பை கொடுத்துள்ள நிலையில், அந்த அணியில் இருந்து சமீபத்தில் வெளியேறினார். அதாவது நிதி மற்றும் கட்டமைப்பு பிரச்சனை, விளையாட்டு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, பார்சிலோனா அணியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. என்றாலும் வரும் நாட்களில் அவர் பார்சிலோனா அணியில் பங்கேற்க மாட்டார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மெஸ்ஸி, தனது கால்பந்து ஆட்டத்தை பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து கிளப்புடன் சேர்ந்து துவங்க உள்ளார். இது தொடர்பான உடன்பாட்டுக்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த PSG கிளப்பின் முன் வரிசை ஏற்கனவே வலிமையானது. ஏனென்றால் இந்த அணியில் மெஸ்ஸியின் நண்பரும் நட்சத்திர வீரருமான நெய்மர் மற்றும் பிரான்ஸ் ஸ்ட்ரைக்கர் கைலியன் எம்பபே ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் 17 ஆண்டுகால சாதனையாளரான மெஸ்ஸியின் வருகை PSG கிளப்பை வெற்றிப் பாதைக்கு முன்னெடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.