ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டை இணைப்பு – வலுக்கும் எதிர்ப்புகள்!
நாடு முழுவதும் மத்திய அரசின் உத்தரவின் படி ஆதார் அட்டையை வாக்காளர் அட்டையுடன் இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது கட்டாயமானதா என்பது குறித்து உச்சநீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்த எதிர்ப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
ஆதார்- வாக்காளர் அட்டை இணைப்பு
மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை அமல்படுத்தியது. அன்றைய சூழ்நிலையில் இந்த திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சென்ற ஆண்டு தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் பல முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் – வாக்காளர் அட்டை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் இல்லை என தெரிவித்தார். ஆனால் அரசு அதிகாரிகள் கட்டாயம் இணைக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 33% பேர் ஆதார் – வாக்காளர் அட்டையை இதுவரை இணைத்துள்ளனர்.
சென்னையில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு தடை – காவல் துறை அதிரடி உத்தரவு!!
Exams Daily Mobile App Download
இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தொடர்பான உரிமைகளை மீறும் வகையில் அமைந்து இருக்கிறது. இந்த இணைப்பு தன்னார்வமாக செய்யக்கூடியது. இதை கட்டாயமாக்க முடியாது என தெரிவித்தது. மேலும் இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மக்களவையில் பேசுகையில், ஆதார் குடியுரிமைக்கான ஆவணம் அல்ல. அதை ஏன் வாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டும். இது குடிமக்கள் அல்லாதோர் வாக்களிப்பதற்கு உதவும் என தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்