மின் கட்டண எண்ணுடன் ஆதார் இணைப்பு – இன்றுடன் (ஜன.31) கால அவகாசம் முடிவு!!
தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் (31.01.2023) முடிவடையவுள்ளது.
மின் இணைப்பு எண் – ஆதார்:
தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் குறித்த முறையான விவரங்களை பெறும் நோக்கில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டது. இதனையடுத்து மின் நுகர்வோர்கள் கடந்த 2022 நவம்பர் மாதம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் டிவி சேனல்களுக்கு முக்கிய அறிவிப்பு – மத்திய ஒளிபரப்பு துறையின் அதிரடி உத்தரவு!
இப்பணியை ஆன்லைன் வாயிலாகவும் மின்வாரிய அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலமாகவும் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் 2022 டிசம்பர் 31ம் தேதி வரை ஆதாருடன் மின் இணைப்பு பணியை மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த காலகெடுவுக்குள் ஏராளமானவர்கள் ஆதார் – மின் இணைப்பு நடைமுறையை இன்னும் முடிக்கவில்லை என்பது தெரிய வந்தது.
இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடையவுள்ளது. அதனால் மின் பயனர்கள் விரைந்து தங்களது ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணியை முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.