வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம், ஒரே நபர் வெவ்வேறு இடங்களில் பல பதிவுகளைச் செய்யும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என அரசாங்கம் கூறுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ‘ஆதார்’ இணைப்புக்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.
ஆதார் எண் இணைப்பு:
ஒரு வாக்காளர், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்துகொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தடுப்பதற்காக வாக்காளர் பட்டிலுடன் ஆதாரை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1950-ம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், பிரிவு 23, உட்பிரிவு 5 வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குள், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிற அனைவரும் தங்கள் ஆதார் எண்கணை தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக 6-பி என்ற படிவம் பயன்படுத்தப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணை தாமாகவே முன்வந்து தெரிவிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி, வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை பெறுவதின் நோக்கம், வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளரின் பதிவுகளை அங்கீகரிக்கவும், எதிர்காலத்தில் அவர்களுக்கு சிறப்பான தேர்தல் சேவைகளை வழங்குவதற்கும் தான். வாக்காளர்கள் ஆதார் எண் சமர்ப்பிப்பதற்கு தன்னார்வமானது என்பது வலியுறுத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்1 முதல், டிசம்பர் 31 வரை, வாக்காளரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆதார் இணைக்க வாய்ப்பு வழங்கப்படும்.
ஆசிரியர் தகுதி வாரியத்தின் 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய அறிவிப்பு!
வரும் 2023 மார்ச் 31க்குள், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 100 சதவீதம் விபரம் இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியது, பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில், வாக்காளரின் ஆதார் விபரம் இணைக்கும் திட்டம் துவங்கியுள்ளது. மேலும் சிறப்பு முகாம் நடத்தியும் விபரம் இணைக்கப்படும்.மேலும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வீடு வீடாக சென்று விபரம் சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முதற்கட்டமாக, கலெக்டர்களுடன் இதுகுறித்து ‘காணொளி’ வாயிலாக ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.