ஆதார் எண் இணைப்பு கட்டாயம் – செப். 30 கடைசி தேதி.. மிஸ் பண்ணிடாதீங்க!
வங்கி மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு திட்டத்தில் இணைந்துள்ளவர்கள் விரைந்து தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு:
வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளவர்கள் அதனுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணியை முடிக்க செப். 30 வரை கால அவகாசம் வழங்கியுள்ளது. இம்மாதம் முடிவடைய இன்னும் 9 நாட்களே மீதமுள்ள நிலையில் விரைந்து ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இல்லையெனில் பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றுவதற்கான கால அவகாசமும் விரைவில் முடிவடைய உள்ளதால் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை விரைந்து மாற்றிக் மாற்றிக் கொள்ளுங்கள்.
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக் கட்டணம் – முதல்வர் முக்கிய அறிவிப்பு!
செப்டம்பர் 30 க்கு பிறகு உங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் இருந்தால் அது செல்லாது. அடுத்ததாக டிரேடிங் மற்றும் டீமேட் கணக்கு வைத்திருப்பவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது நாமினியை நியமிக்க வேண்டும் இல்லையெனில் உங்களது கணக்கு முடக்கப்படும்.