வருணின் கையில் தீபம், பதட்டத்தில் சத்யா – புதிய திருப்பங்களுடன் மௌன ராகம் சீசன் 2! ப்ரோமோ ரிலீஸ்!
சிறு துளி எரியும் நெருப்பை பார்த்தாலே வருண் நிலைகுலைந்து போய்விடுவார். தற்போது கையில் விளக்கை வைத்து பரிகாரம் செய்ய வருண் ஒப்புக்கொள்வது போலவும், என்ன பிரச்சனை நடக்க போகிறதோ என சத்யா துடிதுடிப்பது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மௌன ராகம்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீசன் 2 தொடரில் இந்த வாரம் வருண் சத்யாவிற்காக பரிகாரம் செய்ய போகிறார். அதாவது, சிறு வயதில் வருணின் அம்மா தீயில் கருகி இறந்ததால் தீயை பார்த்தாலே வருணுக்கு அம்மாவின் நியாபகம் வந்துவிடும் மற்றும் அந்த தீயை பார்த்து துடிதுடித்துவிடுவார். இந்த பிரச்சனை சரியாக வேண்டும் என எத்தனையோ வைத்தியம் பார்த்திருக்கிறார். ஆனால், வருண் சரியாகிவிடுவாரோ என்கிற பயத்தில் வருணின் அத்தை அவருக்கு சரியாக மாத்திரையை கொடுப்பதில்லை.
Exams Daily Mobile App Download
மருத்துவர் வருணுக்கு கொடுக்கும் மாத்திரையை தூர வீசிவிட்டு சாதாரணமான வைட்டமின் மாத்திரைகளை கொடுத்துவிடுகிறார். தனக்கு இந்த நோய் சரியாகாதா என வருண் பல முறை மன வேதனையடைந்திருக்கிறார். ஒரு முறை தற்கொலை செய்யவும் முயற்சி செய்திருக்கிறார். அப்போது தான் வருணை சத்யா காப்பாற்றி திருமணமும் செய்து கொண்டார். சத்யா வரவும் வருண் நிம்மதியாக இருப்பதால் நிம்மதியை கெடுக்க வேண்டும் என அவ்வப்போது வருணின் அத்தை பிளான் போட்டு கொண்டிருக்கிறார்.
தற்போது சத்யாவுக்காக வேண்டி கொள்கிறேன் என வருண் கோவிலுக்கு கிளம்பி செல்கிறார். அப்போது சத்யாவின் அத்தை வருணிடம் பரிகாரம் செய்யும்படி கூறுகிறார். என்ன பரிகாரம் என்பது தெரியாமலேயே வருண் அதற்கு ஒப்புக்கொள்கிறார். இதற்கு இடையே சத்யாவின் மாமாவும் வருண் கையில் தீபத்தை வைத்து பரிகாரம் செய்ய போகிறார் என்கிற விஷயத்தை தெரிவிக்கிறார். தீபத்தை வருண் பார்த்துவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும் என பயந்து சத்யா கோவிலுக்கு ஓடி வருகிறார். அதற்குள் வருண் கையில் தீபம் இருப்பதை சத்யா பார்த்துவிடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.