‘இனி டிரைவிங் ஸ்கூலில் பயிற்சியை முடித்தாலே லைசென்ஸ்’ – மத்திய அரசு அறிவிப்பு!
அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு புதிய விதிமுறைகளை தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
ஓட்டுநர் பயிற்சி மையம்:
மத்திய அரசு பல அரசு துறைகளை தனியார் மையமாக மாற்றி அறிவித்து வருகிறது. தற்போது அந்த வகையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் பயனர்கள் முறையான பயிற்சி பெற்றால் போதும் என்றும் ஆர்டிஓ அலுவலக அதிகாரியிடம் வண்டிகள் ஓட்டி காட்டும் அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கு புதிய விதிமுறைகளை மத்திய சாலை போக்குவரத்து மட்டும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
‘பள்ளிக்கு வந்துள்ளேன், கதவை திறக்க சொல்லுங்க’ – 6 வயது சிறுவனின் சிலிர்க்க வைக்கும் செயல்!
புதிய விதிமுறைகள் வருகிற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இது ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பழக வரும் நபர்களுக்கு முறையான பயிற்சி மற்றும் டிரைவிங் தொடர்பான அறிவை பெற உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அமைச்சகம் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் மையங்களுக்கு முக்கிய 4 அம்சங்களை தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறை:
- டிரைவிங் பழக வரும் நபர்களுக்கு அதிக தரமான பயிற்சியை வழங்க, இந்த மையங்கள் சிமுலேட்டர் வாகனம் போன்ற வடிவமைப்பு, டிரைவிங் பழகுவதற்கான பிரத்யேக பாதை ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.
- மோட்டார் வாகன சட்டம், 1988ன் படி ஓட்டுநர் பயிற்சி மையங்களில் புத்தாக்க படிப்பு மற்றும் பயிற்சி வசதிகள் கிடைக்க வேண்டும்.
- இந்த மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி பெற்ற நபர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ஓட்டுநர் பரிசோதனை தேர்வில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அங்கீகாரம் பெற்ற மையங்களில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தால் ஓட்டுநர் உரிமம் பெற்றதற்கு சமம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
- இந்த ஓட்டுநர் மையங்கள், தொழில் ரீதியான சிறப்பு பயிற்சியை அளிக்கவும் அனுமதிக்கப்படுகின்றன.