மார்ச் 18ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் – எல்ஐசி ஊழியர்கள் அறிவிப்பு!!
எல்ஐசி நிறுவனம் தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் மாதம் 18 ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள் மற்றும் காப்பீட்டு ஊழியர் சங்கமும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் போராட்டம்:
1956 ஆம் ஆண்டு ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்ட எல்.ஐ.சி தற்போது ரூ.32 கோடி முதலீட்டில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எல்.ஐ.சி தனியார் மயமாக்கல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
TN Job “FB Group” Join Now
இதுகுறித்து காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்ட பொதுச்செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் கூறுகையில், “எல்.ஐ.சி நிறுவனம் ரூ.32 கோடி முதலீட்டில் தற்போது செயல்பட்டு வருகிறது. அதில் ரூ.30 கோடி தனி நபர் காப்பீடு மற்றும் 12 கோடி குழு காப்பீடுதரர்களை கொண்டுள்ளது. மேலும் இந்திய பொருளாதாரத்தில் இந்த நிறுவனம் ரூ.30.70 லட்சம் கோடிகளாக உள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 லிட்டர் இலவச பால் – இமமுக தேர்தல் அறிக்கை!!
எல்.ஐ.சி நிறுவன பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது, எல்.ஐ.சியை தனியார் மயமாக்குவது, காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 49-ல் இருந்து 74 சதவிகிதமாக உயர்த்துவது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் வளர்ச்சி திட்டங்களில் எல்.ஐ.சி நிறுவனம் பங்கு பெரிதும் பாதிக்கப்படும்.
உத்தரகண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு – இன்று மாலை பதவியேற்பு!!
எனவே இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள எல்.ஐ.சி நிறுவன ஊழியர்கள் மற்றும் காப்பீடு நிறுவன சங்கத்தினர் இணைந்து மார்ச் 18 ஆம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.