மாதந்தோறும் ரூ.14 ஆயிரம் பெறும் பென்ஷன் பாலிசி – LIC புதிய திட்டம்!
LIC பயனர்களுக்கு மாதந்தோறும் 14 ஆயிரம் வரை ஆயுள் முழுவதும் பென்ஷன் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பாலிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் வரைமுறைகள் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பாலிசி திட்டம்
ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC, மக்களின் வருங்கால தேவைகளுக்கு பல சலுகைகளை அளித்து வருகிறது. இந்த காப்பீட்டு நிறுவனம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படுவதால், மக்களின் நம்பிக்கையை பெற்ற சிறந்த நிறுவனமாக திகழ்கிறது. சமீபத்தில் LIC நிறுவனத்தில் நடைமுறையில் இருந்த பழைய பாலிசியை மீண்டுமாக புதுப்பித்துள்ளது. அதாவது வருடாந்தர சேமிப்பு என்ற ஜீவன் அக்ஷய் பாலிசி LIC வாடிக்கையாளர்களுக்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிரமெடுக்கும் டெல்டா பிளஸ் கொரோனா – 3 பேர் பாதிப்பு!
இதன் சிறப்பம்சம் என்னவென்றால் பாலிசிதாரர்கள், பாலிசிக்கான தொகையை செலுத்திய உடனே மாதாந்திர பென்ஷனை பெற்றுக்கொள்ளலாம். அதாவது எதிர்காலத்துக்கான பென்ஷன் தேவைகளை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் இந்த பாலிசியை பயன்படுத்தலாம். இப்பாலிசியை 30 முதல் 85 வயதுடைய அனைவரும் பெற்றுக்கொள்ள தகுதியுடையவர்கள் ஆவர். மேலும் இந்த பாலிஸியின் கீழ் முதலீடு செய்தவுடன், பயனர்கள் விரும்பினால் உடனடியாகவே மாதம் 14 ஆயிரம் வரை பென்ஷன் பெற்றுக்கொள்ள முடியும்.
தமிழக அரசு சார்பில் ரூ.3500 உதவித்தொகை, இலவச பேருந்து பயணம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதற்கு பாலிசி படிவத்தில் உள்ள ஆப்சன் A என்பதை தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக 36 வயதுடைய ஒருவர், இந்த பாலிசியின் கீழ் மாதந்தோறும் 14 ஆயிரம் பென்ஷன் பெற விரும்பினால் அவருக்கு சில சலுகைகள் கிடைக்கிறது. அந்த நன்மைகளின் படி, காப்பீட்டு தொகையாக 30,00,000 மற்றும் மொத்த பிரிமியம் 30,54,000 கிடைக்கும். பென்ஷன் தொகையின் அடிப்படையில், மாதாந்திர பென்ஷன் 14,550, காலாண்டு பென்ஷன் 43,913, அரையாண்டு பென்ஷன் 88,500 மற்றும் வருடாந்திர பென்ஷன் 1,80,00 ஆக அந்த பாலிசிதாரர் பெற்றுக்கொள்ளலாம்.