LIC பாலிசிதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – தவணையை செலுத்த அவகாசம் நீட்டிப்பு!
எல்ஐசி பாலிசிதாரர்கள் தாங்கள் செலுத்தி வந்த ப்ரீமியம் தொகைகளை செலுத்தாமல் விடுபட்டு போயிருந்தால் அவற்றை செலுத்துவதற்கு தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலஅவகாசம் நீட்டிப்பு:
கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக அனைத்து விதமான தொழில்துறைகளும் முடங்கியது. இதனால் மக்களின் பொருளாதார நிலைமிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்தது. இதனால் நாட்டில் பல மாற்றங்களும் நடந்தது. மக்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் பல முக்கிய பணிகளுக்கும் கால அவகாசம் நீடித்து வழங்கப்பட்டது. இதேபோல், கொரோனா கால நெருக்கடி நிலையில் தவிக்கும் தனது பயனர்களுக்கு எல்ஐசி நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் 108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – சம்பளம் ரூ.14,964/- உடனே விரையுங்கள்!
அதன்படி, காலாவதியான தனிநபர் காப்பீட்டு பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான சிறப்பு முகாம் பிப்ரவரி 7-ம் தேதியிலிருந்து மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ரீமியம் செலுத்தும் காலத்தில் காலாவதியான அதேநேரம் முதிர்வு காலத்தை முடிக்காத பாலிசிகளை இந்த முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளது. இந்த நிதியாண்டின் 2ம் காலாண்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
MS தோனி முதல் ரோஹித் சர்மா வரை – 2022 IPL அணிகளின் 10 கேப்டன்கள்!
பயனாளிகள் தாங்கள் செலுத்த தவறிய முதல் தவணை ப்ரீமியம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ப்ரீமியன் செலுத்தப்படவில்லை என்றால் சில விதிமுறைகளுக்கு உட்பட்டும், மற்ற பாலிசிகளுக்கு புதுப்பிக்கும் சலுகை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் தொகை 1 லட்சம் வரை நிலுவையில் இருந்தால் அதற்கு தாமத கட்டணமாக 20% மும், 3லட்சம் ரூபாய் வரை நிலுவை இருந்தால் அதற்கு 30% அபராதமும் செலுத்த வேண்டும். பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிகளை தவறவிடாமல் பயனடைந்து கொள்ளும் வகையில் இந்த சலுகை அளிக்கப்பட்டுள்ளது.