LIC ADO பணியிடத்திற்கான Mains தேர்வு தேதி மாற்றம் – வெளியான அறிவிப்பு!
காப்பீட்டு குழுமம் மற்றும் முதலீட்டு நிறுவனமான LIC நிறுவனம் ADO பணியிடத்திற்கான முதன்மை தேர்வை வருகிற ஏப்ரல் 8ம் தேதி அன்று நடத்துவதாக அறிவித்த நிலையில், தற்போது இந்த தேதியை மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தேர்வு தேதி மாற்றம்
LIC நிறுவனமானது ADO பணியிடத்தில் காலியாக இருந்த 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த சில முன்னதாக வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பில், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 21 முதல் பிப்ரவரி 10ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணியிக்கு விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
Follow our Twitter Page for More Latest News Updates
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 21 வயது முதல் அதிகபட்சமாக 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு Prelims Exam, Mains Exam, Interview Process ஆகிய தேர்வு முறைகள் மூலமாக தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி இப்பணிக்கான Mains தேர்வானது வருகிற ஏப்ரல் 8ம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
சென்னை – வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை தொடக்கம் – மார்ச் 26 முதல்! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு!
இந்த நிலையில், LIC தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில், LIC ADO பணியிடத்திற்கான முதன்மை தேர்வுக்குரிய தேர்வு தேதியை வருகிற ஏப்ரல் 23ம் தேதி அன்று நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் மற்ற அறிவிப்புகளில் ஏதும் மாற்றமில்லை என்றும் அறிவித்துள்ளது.