இனி Library போய் புத்தகம் படிக்க தேவையில்லை.. தமிழக அரசின் ‘நூலக நண்பர்கள் திட்டம்’ – டிச. 1 தொடக்கம்!
தமிழக அரசானது நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்கு, தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது.
நூலக வளர்ச்சிக்காக புதிய திட்டம் :
தமிழகத்தில் நூலகங்கள் வளர்ச்சியை மேம்படுத்த அரசானது பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை மக்களிடையே ஊக்குவிப்பதற்காகவும், மேலும் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று நூல்களை வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஓய்வூதியதாரர்கள் ஆன்லைன் மூலமாக உயிர் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்…’இந்த’ ஆப் போதும்!!
Exams Daily Mobile App Download
அதாவது நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாதவர்களுக்காக ‘நூலக நண்பர்கள் திட்டம்’ டிசம்பர் 1 தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.மேலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் போன்றவர்கள் நூலகங்களுக்கு சென்று புத்தகங்கள் படிக்க இயலாத நிலையில் இத்திட்டத்தின் மூலம் அவர்களின் வீடுகளுக்கு சென்று நூல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.