தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடம் – புதிய திட்டம்!
தமிழகத்தில் பல்வேறு கட்டுகளுடன் 9 முதல் 12ம் வகுப்புக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடங்கள் அனுப்பப்படுவதாக கோரப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் அலை என கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. நோய் பரவும் விகிதம் அதிகமாக இருந்தததன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் இயங்கி வருகிறது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு, முகக்கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை – ஆணையர் எச்சரிக்கை!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் கோவை மாவட்டத்தில் 11 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சம்பளத்தில் 50% வேலையின்மை உதவித்தொகை திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!
இது குறித்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் விபரங்கள், தினசரி எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றப்படுகின்றன. மாணவர்களின் பெற்றோரை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்து, தினசரி கேட்டறிய உத்தரவிடப்பட்டுள்ளது. வருகைப்பதிவு கட்டாயமாக்காததால், உடல்நிலை சரியில்லாத மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என தெரிவித்துள்ளோம். அவர்களுக்கு, அன்றைய நாளில் நடத்தப்பட்ட பாட விவரங்கள், அந்தந்த ஆசிரியர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது என அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.