வீடியோ வழியில் பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் – கல்வி தொலைக்காட்சி!
தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடங்கள் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு கல்வி தொலைக்காட்சி மூலமாக ஒளிபரப்பப்படுகிறது. இதனால் மாணவர்கள் சோர்வின்றி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர் என பள்ளிக்கல்வித்துறை கூறுகிறது.
கல்வி தொலைக்காட்சி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கு அரசு கல்வி தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியது. இதில் வகுப்பு வாரியாக கால அட்டவணை தயார் செய்யப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு ஆசிரியர் வகுப்பெடுப்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஸ்மார்ட் போன்கள் வாங்கி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
சென்னையில் கொரோனா பாதிப்பு 5%க்கு கீழ் குறைவு – மாநகராட்சி பெருமிதம்!!
நாள் முழுவதும் மாணவர்கள் தொலைக்காட்சியை பார்த்து கல்வி கற்பதால் சோர்வடைகிறார்கள். இவர்களிடம் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. வகுப்புகள் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது. மாணவர்கள் எல்லா நேரங்களில் கற்றலை தொடர வசதியாக உள்ளது. அந்த வீடியோக்கள் யூடியூப்பில் பதிவிடப்படுகிறது. தவறவிட்ட மாணவர்கள் மறுநாள் காலை யூடியூப் சேனலில் பார்த்து கற்றுக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
இதற்காக ஆசிரியர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு வரவழைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு பதிவு செய்யப்படுகிறது. அவை பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பப்படுகிறது. நேற்றுடன் திருச்சியில் 70 வகுப்புகள் நடத்தப்பட்டு வீடியோவாக பதிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. இதற்காக சிறந்த தொழில் நுட்பங்களும் பயன்படுத்தப்படுகிறது. விரைவில் இன்னும் புதிய முயற்சிகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.