அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்? முக்கிய தகவல் வெளியீடு!
பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில், முதல்வர் பகவந்த் மான், அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் டெல்லியிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தீர்மானம் நிறைவேற்றம்:
மத்திய அரசால் அண்மையில் அக்னிபாத் என்ற பெயரில் புதிய ராணுவ ஆட்சேர்ப்புக் கொள்கை வெளியானது. இந்த அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரும் போராட்டங்கள் வெடித்தன. வட இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மேலும் ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. இதனால் பல நூறு ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல்களால் ரயில்வே துறைக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் தமிழகத்திலும் கூட வேலூர், மதுரையில் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
Exams Daily Mobile App Download
அக்னிபாத் வீரர்கள், 4 ஆண்டு கால ராணுவ பணிக்கு என்ன செய்வார்கள் என்ற கேள்விக்கு பாஜக தரப்பில் இருந்து வெளியான பதில்கள் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது. இத்தனை எதிர்ப்புகளுக்கு இடையே அக்னிபாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி அக்னிபாத் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் பஞ்சாப் சட்டசபையில் முதல்வர் பகவந்த் மான் இத்தீர்மானத்தை தாக்கல் செய்தார். இத்தீர்மானம் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 16,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – சுகாதாரத்துறை தகவல்!
இந்நிலையில் டெல்லி சட்டப்பேரவையின் இரண்டு நாள் மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. மேலும் சட்டப்பேரவைக்கு வரும் உறுப்பினர்கள், கொரோனா இல்லா சான்று வைத்திருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பஞ்சாப் மாநிலத்தைப் போன்று, டெல்லியிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில், ஒழுங்கற்ற குடிநீர் விநியோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சியான பாஜக திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.