தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு – அரசு அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடத்த உள்ளது. இதனை தொடர்ந்து 19ம் தேதி அன்று பொது விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் தற்போது ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை அரசு அறிவித்துள்ளது.
ஊழியர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் அறிவிப்பு – தொடர்ந்து கசியும் வினாத்தாள்கள்!
அதன்படி இதில் உள்ள 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தமாக 12,838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான வாக்குப்பதிவு நேரம் காலை 7 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் தேர்தலை கொரோனா மேலும் பரவாமல் நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை – கல்வித்துறை அதிரடி உத்தரவு!
இதில் அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெறும் வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் அன்று வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை என்று அரசு தெரிவித்துள்ளது. அன்றைய தினம் பணியாளர்கள் விடுமுறை எடுத்தால் அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்ய கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.