டிச. 24 முதல் ஜன.2 வரை விடுமுறை அறிவிப்பு – கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகை எதிரொலி!
மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வரும் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை தொடர் விடுமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை கால நீதிமன்றத்தில் பணியாற்ற உள்ள நீதிபதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு:
நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அனைத்திற்கும் கோடை மற்றும் குளிர் கால விடுமுறைகள் அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த நீதிமன்ற விடுமுறை நாட்களில் மிகவும் அவசரமான மற்றும் முக்கியமான சில வழக்குகளை மட்டும் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இதற்கான நீதிபதிகளை நியமித்து முன்னதாக அறிவித்து விடுவார்கள். இந்நிலையில் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் மற்றும் ஜனவரி 1ம் தேதி புத்தாண்டு வர இருக்கிறது. தற்போது குளிர்கால விடுமுறைக்கான மாதமாக இருக்கிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5.24 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு!
இதனால் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் அவசர வழக்குகளை விசாரிக்க உள்ள நீதிபதிகளின் விவரங்களும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 29ம் தேதியான புதன்கிழமை ஒரு மட்டும் மட்டும் விடுமுறை கால கோர்ட் செயல்பட உள்ளது. அப்போது அனைத்து டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி ஆகியோர் விசாரிக்க உள்ளனர். டிவிஷன் பெஞ்ச் விசாரணை முடிந்த பின்பு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் தனி அமர்வில் அனைத்து ரிட் மனுக்களையும் விசாரிக்க உள்ளார்.
இரவு நேர ஊரடங்கு அமல் – மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்! ஓமைக்ரான் எதிரொலி!
நீதிபதி ஸ்ரீமதி, மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க உள்ளார். மேலும், அனைத்து கிரிமினல் மனுக்களையும் நீதிபதி ஆனந்தி விசாரிக்க உள்ளார். இதனால் அவசர வழக்குகளின் வக்கீல்கள் தங்கள் வழக்குகளின் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உயர்நீதிமன்றத்தின் உரிய இ-மெயில் ஐடிக்கு அனுப்பும் படி பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். விடுமுறை காலம் முடிந்த பின்னர் நீதிமன்றம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.