தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி விடுப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி விடுப்பு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி விடுப்பு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி விடுப்பு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அரசுப் பள்ளிகளில் ஓய்வு பெறும் அனைத்து பணியாளர்களையும் தலைமை ஆசிரியர்களே பணி விடுவிப்பு செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பணியாளர்கள் ஓய்வு:

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 வயதாக இருந்தது. இந்த நிலையில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக அரசுக்கு பெரும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவியது. இந்த சூழலில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓய்வு பெறும் வயது அதிகரிப்பால் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தவர்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் ஓய்வு பெறும் வயது உயர்த்தப் போவதாக அரசுத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.

ஜூலை 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி!

தற்போதைய தகவலின் படி ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டால் இளைஞர்கள் மற்றும் அரசு வேலைக்காக காத்திருப்போருக்கு அரசு வேலை கிடைக்க இன்னும் கால தாமதம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி தமிழக அரசுத்துறையில் 7,000 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து இந்த மாதத்தில் மட்டும் நடப்பு ஆண்டில் மட்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என மொத்தம் சுமார் 25,000 பேர் வரை ஓய்வு பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் ஓய்வு பெறும் அனைத்து பணியாளர்களையும் தலைமை ஆசிரியர்களே பணி விடுவிப்பு செய்யலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து அனுப்பிய சுற்றறிக்கையில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் அனைத்து ஆசிரியர்களையும் அந்தந்த தலைமை ஆசிரியர்களே பணிவிடுப்பு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதுதவிர ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் இருந்த பணிகள் அனைத்தும் முறையாக மறு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, தணிக்கைத் தடை ஏதும் நிலுவையில் இல்லை என்பதையும் தலைமை ஆசிரியர்கள் உறுதி படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!