தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம், ஜன.1 முதல் அகவிலைப்படி – வலுக்கும் கோரிக்கை!
முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன்களை வழங்குதல், அகவிலைப்படி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்:
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2021ம் ஆண்டு அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 31% ஆக உயர்த்தப்பட்டது. மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்தது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி உயர்த்தப்படும். பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். அரசு துறை காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
TN TET போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு – பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. மேலும் 7-வது ஊதிய கமிஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். அதே போல வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முடக்கப்பட்ட ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன்களை ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசு வழங்கும் உதவித்தொகை!
மேலும் 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். காப்பீடு திட்ட குறைபாடுகளை களைய வேண்டும். மேல்நிலை தொட்டி இயக்குவோர், துப்புரவு பணியாளர், தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கியதை போல மேலும் 3% அகவிலைப்படி வழங்க வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.