தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு பிப்.19ம் தேதி விடுமுறை – நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு பிப்.19ம் தேதி விடுமுறை - நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!
தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு பிப்.19ம் தேதி விடுமுறை - நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!
தமிழகத்தில் வாக்குரிமை உள்ளவர்களுக்கு பிப்.19ம் தேதி விடுமுறை – நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.

பொது விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை ரத்து செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பிப்ரவரி 20 வரை மீண்டும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!

அத்துடன் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற பிப்ரவரி 22ம் தேதி அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தலுக்காக பல பிரச்சாரங்கள் மற்றும் பொது கூட்டங்கள் நடத்தப்படும். அப்பொழுது கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றுவது மிகவும் சந்தேகத்துக்குரியது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை என பிரச்சார நேரங்களுக்கான கட்டுப்பாட்டையும் அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வில் நேர மாற்றம்!

அத்துடன் வாக்குப்பதிவு நாளான்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு பதிவு தினத்தில் வாக்குரிமை உள்ள அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை வழங்காத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!