தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற பிரகதீஸ்வரர் ஆலயமான தஞ்சை பெரிய கோவிலில் 2 வருடங்களுக்கு பிறகு தேரோட்டம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் அறிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த ஆலயம் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை காண வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி 18 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். இருப்பினும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால், தஞ்சாவூரில் பெரிய கோவிலின் தேரோட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கொரோனா குறைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி வருகின்றது.

நாட்டில் அவசரநிலை பிரகடனம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!

இந்நிலையில் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் மார்ச் 30 அன்று தொடங்கியது. பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக சொல்லப்படும் திருத்தேரோட்டம் வருகிற ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும். தஞ்சையில் உள்ள நான்கு ராஜ வீதிகளிலும் தேர் வலம் வரும். நான்கு ராஜ வீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பெரிய கோவிலில் தேரோட்டம் நடைபெறுவதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்த்த தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தோ்த்திருவிழாவையொட்டி, ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக, மே 14- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881-இல் கீழ் வராது என்பதால், அரசு பணிகளில் எந்த இடையூறு இல்லாமல் மாவட்டக் கருவூலம், அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளா்களுடன் இயங்கும் என அறிவிப்பு குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!