பள்ளி மாணவர்களுக்கான ஹாப்பி நியூஸ் – மே 15 முதல் ஜூன் 30 வரை விடுமுறை! அரசு அறிவிப்பு!
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளியின் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 15 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை விடுமுறை:
கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டில் அதிகமான வெப்ப சலனம் நிலவிவருகிறது. எப்போதும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் முழுக்க முழுக்க வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போது மே மாதம் தொடங்க இருக்கும் நிலையிலும் வெயிலின் அளவு அதிகமாக இருந்து வருகிறது. எப்போதும் மார்ச் ஏப்ரல் மாதத்திலேயே பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் முடிந்துவிட்டு கோடை விடுமுறை விடப் பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக காலம் தாழ்த்தி தான் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டதால் மே மாதத்திலிருந்து அனைத்து தேர்வுகளும் துவங்க இருக்கிறது.
SBI வங்கியில் 36 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் மாணவர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இது மட்டுமல்லாமல் உடல் சார்ந்த நோய்களும், தோல் வியாதிகளும் பரவிக்கொண்டிருக்கிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தான் வெப்பச்சலனம் மிக அதிகமாகி வருகிறது. இதனால் ஒடிசா மாநிலத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் மே 2 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Download
இதனைத் தொடர்ந்து தற்போது பஞ்சாபிலும் வெயில் கொளுத்தி வருவதன் காரணமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை 7 மணி முதல் காலை 11 மணி வரைக்கும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 7 மணி முதல் பிற்பகல் 12. 30 மணி வரைக்கும் பள்ளிகள் இயங்க உள்ளதாக பஞ்சாபிய அரசு அறிவித்துள்ளது. மேலும், மே 15ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், மே16 முதல் மே 31-ஆம் தேதி வரை இந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.