தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – இன்று முதல் விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் (25.12.2021) 2022 ஜனவரி 2ம் தேதி வரை 9 நாட்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஆன்லைன் மூலமாகவும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. 1- 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சியும் அறிவிக்கப்பட்டது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் சற்று குறைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக 9-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த கட்டமாக 1-8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 பொருட்கள் பொங்கல் பரிசு 2022 – டெண்டர் பணிகள் தீவிரம்!
இந்த நிலையில் பருவ மழை காரணமாக பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மழை குறைந்த பிறகு வழக்கம் போல பள்ளிகள் இயங்கி வருகிறது. நடப்பு கல்வியாண்டு அரையாண்டு தேர்வுக்கு பதில் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிட்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 17ம் தேதி முதல் திருப்புதல் தேர்வு தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து நடுநிலை வகுப்புகளுக்கும் மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!
ஏற்கனவே கொரோனா பரவலால் அதிகளவில் விடுமுறை விடப்பட்டிருந்தது, அடுத்து மழை காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தால் அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து திருப்புதல் தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஜனவரி 3ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்.