சாஃப்டர் பள்ளிக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதனால் அப்பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற உள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஃப்டர் பள்ளிக்கு விடுமுறை:
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை 11 மணியளவில் இடைவேளையின் போது கழிப்பறை முன்பக்க சுவர் எதிர்பாராத விதமாக கீழே சாய்ந்து விழுந்தது. அவ்வாறு சுவர் விழுந்ததில் 7 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இந்த விபத்தில் 7 மாணவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 4 மாணவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு? முக்கிய காரணிகள் விளக்கம்!
அந்த 4 மாணவர்களுக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் 4 பேரும் நலமாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி கழிப்பறை சுவர் சரியாக பராமரிக்கப்படாமல் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து தமிழகத்தில் இது போன்ற சோக சம்பவங்கள் இனிமேல் நிகழ கூடாது என்ற நோக்கில் தமிழக அரசு அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு ஒன்றை அமைத்துள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ – பதிவு கட்டாயம் | ஓமைக்ரான் எதிரொலி!
இந்த குழுவில் இன்ஜினியர் மற்றும் சில உயர்கல்வி அதிகாரிகள் இடம்பெற்று மேற்பார்வையிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விபத்து நடைபெற்ற சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இன்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை அந்த பள்ளிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.