தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கரூர் மாவட்டத்தில் வரும் 19ம் தேதி மிலாடி நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்ய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
மது விற்க தடை:
இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மிலாடி நபி திருநாளாக கொண்டாடப்படுகிறது அன்றைய தினம் அரசு விடுமுறை தினமாகும். நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதி வியாழக்கிழமை அன்று பிறை தென்பட்டது. இதனை வைத்து வரும் 19.10.2021 ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்படும் என்று தமிழக தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் அன்றைய தினம் மது விற்பனை செய்ய கூடாது என்று கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக பள்ளிகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை, 5 வேலை நாட்கள் – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் முக்கிய அரசு விடுமுறை தினங்களில் மது கடைகள் திறக்க தடை விதிக்கப்படும். அதன்படி மிலாடி நபி அன்றும் அனைத்து மாவட்டங்களிலும் மது விற்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கரூரில் 19ல் மிலாடி நபி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை விதிகள் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் விண்ணப்பித்த மறுநாளே மின் இணைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி!
ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு மது விற்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதங்களில் நிலவிய ஊரடங்கு காலத்திலும் மதுக்கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்மையில் 9 மாவட்டங்களிலும் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் காரணமாகவும் மதுக்கடைகள் திறக்கவும், மதுபானம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மிலாடி நபியை முன்னிட்டு மது விற்பனை தடை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.