தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – அரசு முக்கிய அறிவிப்பு!

முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரான குருநாதன் என்கின்ற காடுவெட்டி குரு என்பவரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் 22 டாஸ்மாக் கடைகள் இன்று (மே 25) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

தமிழகத்தில் அதிக வருமானம் ஈட்டும் துறையாக டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. தமிழக வாணிப கழகத்தின் சார்பில் மொத்தம் 5,300 மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருவிழாக்களின் போது டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க தலைவராக இருந்த ஜெ.குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

தமிழக அரசில் டிகிரி முடித்தவர்க்கு வேலை தயார் – ஊதியம் ரூ.65,000 & Allowance ரூ.10,000 பெறலாம்..!

அவருக்கு பாமக சார்பில் அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூ.2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஜெ.குருவின் நினைவு தினத்தன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் அவருடைய மணி மண்டபத்திற்கு வந்து அஞ்சலி செலுத்துவார்கள். அந்த வகையில் இன்று (மே 25) அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதனால் அரியலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மாநில வாணிப கழகம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மேலாளர் செல்வராஜ் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரான குருநாதன் என்கிற காடுவெட்டி குரு என்பவரின் நான்காம் ஆண்டு நினைவு தின அஞ்சலியை முன்னிட்டு இன்று (மே 25) தேதி வன்னியர் சங்கத்தினர், பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் என சுமார் 5000 பேர் அஞ்சலி செலுத்த வந்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

அதனால் அரியலூர் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள 22 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி செந்துரை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், டி.புலியூர், மீன்சுருட்டி,பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!