தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!

தமிழகத்தில் இன்று மிலாடி நபியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

டாஸ்மாக் கடை அடைப்பு:

தமிழகத்தில் இன்று மிலாடி நபி கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து இஸ்லாமியர்களும் நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு மிலாடி நபி தினத்தை கொண்டாடுகின்றனர். நபிகள் நாயகம் அனைவரும் நலன் பெரும் வகையில் கொள்கைகள் அமைத்து புனித தன்மையுடன் வாழ்ந்தவர். இந்த மிலாடி நபி தினமானது இஸ்லாமியர்களின் சந்திர நாட்காட்டியின்படி இன்று மாத பிறப்பு ஆகும். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் முதல் வாரத்தில் இது கொண்டாடப்படுகிறது. இது மிகவும் புனிதமான நாளாக கருதப்பட்டு வருகிறது. அதனால் பல்வேறு துறைகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த மிலாடி நபி பண்டிகையானது அரபு நாடுகளில் 3 நாட்களுக்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – மாஜி ராணுவத்தினருக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் குறிப்பாக டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மிலாடி நபி தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து இசுலாமிய மக்களுக்கும் தனது மிலாடி நபி வாழ்த்தினை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு சாரா என்று ஏராளமான மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பல கடைகள் அரசு உரிமம் பெற்று ஹோட்டல்கள், மால்கள் மற்றும் கிளப்புகள் என செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதனை தொடர்ந்து தமிழகத்தில் மிலாடி நபி தினத்தன்று மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.

தமிழகத்தில் அக்.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனை தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகள், ஹோட்டல்களில் செயல்படும் உரிமம் பெற்ற பார்கள், மற்றும் கிளப்புகளில் நடத்தப்படும் மதுக்கூடங்கள் என அனைத்திற்கும் விடுமுறை அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதையும் மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது அரசுக்கு தெரியவந்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் அந்த பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் இத்தகைய திடீர் அறிவிப்பு மதுப்பிரியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!