ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!

0
ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை - கொரோனா பரவல் எதிரொலி!
ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை - கொரோனா பரவல் எதிரொலி!
ஜனவரி 31 வரை 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை – கொரோனா பரவல் எதிரொலி!

பெங்களூருவில் கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியதால், குழந்தைகளின் நலன் கருதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி 31ம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை:

கர்நாடகா மாநிலத்தில் தான் கொரோனா வைரஸின் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை வைரஸ் நாட்டிலேயே முதன்முதலில் உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதுக்காப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது. பெங்களூருவில் மட்டும் புதன்கிழமை நிலவரப்படி 15,617 பேருக்கு புதிதாக கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன, செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 73,654 ஆக உள்ளது. தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 874 ஆக உள்ளது. பெங்களூரில் நேர்மறை விகிதம் 15.96% ஐ எட்டியுள்ளது. பெங்களூரில் கோவிட்-19 வழக்குகள் சமீபத்தில் அதிகரித்ததைத் தொடர்ந்து, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை ஜனவரி இறுதி வரை மூட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை – ஜாக்பாட் அறிவிப்பு!

கர்நாடக கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் புதன்கிழமையான நேற்று இதனை அறிவித்தார். மேலும், பெங்களூரில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ தாண்டியதால், குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பள்ளிகளைத் திறப்பது அல்லது மூடுவது குறித்து மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள அந்தந்த மாவட்டங்களின் மாவட்ட ஆணையர்களின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் தொற்று பாதிப்புகள் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 18 முதல் 31 வரை ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

ஒரு வகுப்பு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் நிலைமையை அடிப்படையாக வைத்து பள்ளிகளை நடத்துவது குறித்து தாலுகா அளவில் முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர்கூறினார். இது தொடர்பாக தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும். மாநிலத்தில் உள்ள பன்னிரண்டு தாலுகாக்களில் இதுவரை ஒருவருக்கு கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை. கலபுர்கியில் உள்ள கர்நாடகா மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று 16 மாணவர்கள் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதுவரை அங்கு மொத்தம் 45 பேர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!