பொங்கல் பண்டிகை: கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை.. பிப். 4 வேலை நாள் – புதுச்சேரி அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் 2023 ஜனவரி 17ஆம் தேதி உழவர் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரிக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கைக்கும், விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இப்பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை தொடர்ந்து தமிழ் மக்கள் வாழக்கூடிய புதுவையிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும்.
Exams Daily Mobile App Download
இந்த பொங்கல் பண்டிகையின் 3 – ம் நாள் உழவர் திருநாள். உயிர் வாழ தேவையான உணவினை அழிக்கும் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக உழவர் திருநாள் மக்களால் கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த உழவர் திருநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டரில் வணிகங்களுக்கான புதிய விதிமுறை அறிமுகம் – எலோன் மஸ்க் ட்வீட்!!
அதனை தொடர்ந்து ஜன. 17ம் தேதி அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் பிப்ரவரி 4 – ம் தேதி வேலை நாள் என்று புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.