மதுரையில் அக்.29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மதுரையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல முன்னணி நிறுவனங்கள் பெரும் பொருளாதார பாதிப்பினை கண்டது. அதன் காரணமாக பலர் தங்களது வேலையே இழந்ததால் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாட தொடங்கியது. இந்த நிலையில் அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் நிறுவனங்கள் மீண்டும் பொருளாதார ரீதியாக மேலெழுந்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு PF வட்டி விகிதம் 7.1% ஆக தொடரும் – அரசாணை வெளியீடு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை மறுநாள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்குபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இம்முகாமில் 10ம் வகுப்பு,12ம் வகுப்பு, டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ கல்வித்தகுதி மற்றும் பணி முன்அனுபவம் உள்ளவர்கள் என அனைவரும் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நவ.1 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம்? வருகை கட்டாயம்? அமைச்சர் விளக்கம்!
அக்டோபர் 29ம் தேதி நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை கே.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி முகாம் வாயிலாக தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.