CBSE பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
CBSE பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
CBSE பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு!
CBSE பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

CBSE வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைத்துவ விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன.

விருதுகள் அறிவிப்பு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2021-22 ஆம் ஆண்டுக்கான சிறந்த கற்பித்தல் மற்றும் பள்ளி தலைமைத்துவ விருதுகளுக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, CBSE வாரியம் அதன் இணைப்பு பள்ளிகளின் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களை கவுரவித்து வருகிறது. அந்த வகையில் சிபிஎஸ்இ உடன் இணைந்த பள்ளிகளின் ஆசிரியர் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த விருது, கற்பித்தல் மற்றும் கற்றலின் தரத்தை மேம்படுத்துவதின் முன்மாதிரியான பணிகளை அங்கீகரிக்கிறது.

Exams Daily Mobile App Download

இப்போது CBSE வாரியத்தின் ஒவ்வொரு விருது பெறுபவருக்கும் தகுதிச் சான்றிதழ் மற்றும் 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இப்போது இந்த ஆண்டுக்கான விருதுகளை பெற விண்ணப்பதாரர்கள் www.cbse.nic.in மற்றும் cbseacademic.nic.in என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 20 ஆகும். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதை விண்ணப்பதாரர்கள் கவனிக்க வேண்டும். இப்போது இறுதித் தகுதிப் பட்டியலிலிருந்து ஒவ்வொரு பிரிவிலும் நான்கு மடங்கு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் விருது பெறுபவர்கள், தொடர்புடைய துறையில் அனுபவம், வயது, உயர் தகுதி மற்றும் கல்வித் தகுதியில் சதவீதம் ஆகியவை கருத்தில் எடுக்கப்பட இருக்கிறது. இப்போது ஆசிரியர் பிரிவு விருதுக்கு விண்ணப்பதாரர்கள் தற்போது CBSE உடன் இணைந்த தனியார் பள்ளிகளுடன் பணிபுரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் சிபிஎஸ்இ அல்லது வேறு ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக் கல்வி வாரியத்தில் ஆசிரியராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

மேலும், முதன்மை பிரிவினருக்கான விருதுக்கு மார்ச் 31, 2022க்குள் சிபிஎஸ்இ இணைக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியராக 10 ஆண்டுகள் மற்றும் முதல்வராக 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனைத்து தனியார் பள்ளிகளின் முதல்வர்களும் விண்ணப்பிக்கலாம். தவிர, மார்ச் 31 அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது முதல்வர்கள் மற்ற எல்லா நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தால் விண்ணப்பங்களை செலுத்தலாம். இதனுடன் ஏற்கனவே CBSE கெளரவம் பெற்ற ஆசிரியர்கள் அல்லது அதிபர்கள், கல்வி அமைச்சினால் ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆசிரியர் பிரிவில் அதிபர்கள் விண்ணப்பிக்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!