இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் – தலைவர்கள் இரங்கல்!
இங்கிலாந்து நாட்டின் மகாராணி இரண்டாம் எலிசபெத் திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இன்று (செப். 9) காலமானார். அவருக்கு வயது 96 என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இரங்கல் அறிவிப்பு:
பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் 70 ஆண்டுகள் அரசாட்சி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நீண்டகால முடியாட்சியை நடத்தி வந்த ராணி இரண்டாம் எலிசபெத் இன்று (செப் 9) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். மகாராணி எலிசபெத்தின் உடல்நிலை கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதிக்கப்பட்டது. இருந்த போதினும் தொடர்ந்து அவர் அரசு விழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகளில் பங்கேற்றார். அவர் நடக்க முடியாத சூழலில் கைத்தடி ஏந்தி நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை மகாராணியின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதன் பின் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இருந்த போதிலும் அவருடைய வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பால்மோர இல்லத்தில் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புது வீடு பற்றி கதிரிடம் சொன்ன கண்ணன், கோவப்படும் மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
மேலும் ராணியின் மறைவுக்கு பிரிட்டனில் தேசிய துக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் தேசிய கொடிகளும் கீழிறக்கப்பட்டுள்ளது. மேலும் ராணியின் இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் அனைவரும் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டிற்கு வந்து சேர்ந்தனர். 1952இல் அரியணைக்கு வந்த ராணி, தனது ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை தன் வாழ்நாளில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்