தமிழகத்தில் இந்த இடங்களுக்கு செல்ல அனுமதி மறுப்பு – அரசின் முக்கிய உத்தரவு!
நாட்டின் 74 -வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பொது மக்கள் தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழா:
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் ஜன. 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இந்த ஆண்டு காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகில் குடியரசு தினவிழா நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் ஜன 27 & 28 தேதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி – ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்க அழைப்பு!!
இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். அதனை தொடர்ந்து முப்படை அணிவகுப்பு நடைபெறவுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மற்றும் அரசின் 20 துறைகளை சார்ந்த அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெறவுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள தலைவர்கள் நினைவிடங்களுக்கு செல்ல இன்று மற்றும் நாளை (ஜன.26) பிற்பகல் வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.