பல்வேறு திட்டங்களுடன் ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு அடிக்கல் – பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!!
குஜராத் மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து நாளை 11 மணிக்கு ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்ட இருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ சிவ பார்வதி கோயில்:
குஜராத் மாநிலத்தில் சோம்நாத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படவுள்ளது. நாளை ஆகஸ்ட் 20ம் தேதி காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி காலை 11 மணிக்கு திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் நடைபாதை, சோம்நாத் கண்காட்சி மையம் மற்றும் புனரமைக்கப்பட்ட பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகம் ஆகியவற்றை பிரதமர் திறந்து வைக்கிறார். அதனை தொடர்ந்து ஸ்ரீ சிவ பார்வதி கோயிலுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் நடைமுறைக்கு வரும் ஷரியத் சட்டம், ஜனநாயகம் இல்லை – தாலீபான்கள் அறிவிப்பு!
வடமாநிலங்களில் ஆன்மீகம் மற்றும் பாரம்பரிய தலங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பிரசாத் திட்டத்தின் கீழ் ரூ 47 கோடி மொத்த மதிப்பீட்டில் சோம்நாத் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சோம்நாத் கண்காட்சி மையம், பழைய சோம்நாத் கோயில் பாகங்களையும், பழைய சோம்நாத் நாகர் முறையில் கோயில் கட்டிடக்கலை சிற்பங்களை கொண்டு சுற்றுலா வசதி மைய வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
பழைய (ஜுனா) சோம்நாத் கோயில் வளாகமானது ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையால் ரூ 3.5 கோடி மொத்த மதிப்பீட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக இடவசதியுடன் மொத்த பழைய கோயில் வளாகம் புனரமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இது அரசிஅஹில்யா பாய் இந்த கோயிலை கட்டியதால் அகில்யாபாய் கோயில் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர், மத்திய சுற்றுலா அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொளல் இருப்பது குறிப்பிடத்தக்கது.