Tokyo Olympics Boxing 2020 – வெண்கல பதக்கம் வென்றார் லவ்லினா! அரையிறுதியில் தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவை சேர்ந்த லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதி போட்டியில் தோல்வியுற்றவுடன் தங்கப்பதக்கத்துக்கான இந்தியாவின் கனவு தகர்ந்தது. இருப்பினும் வெண்கல பதக்கத்தை அவர் பெற்று தந்துள்ளார்.
வெண்கல பதக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதியில் தோல்வியை தழுவியுள்ளார். அதாவது கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ எடைப்பிரிவில் சீனாவை சேர்ந்த உலக சாம்பியனான தைபேயின் சென் நீன்-சின் என்பவரை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
Tokyo Olympics 2020 Wrestling – ரவி தகியா, தீபக் புனியா அரையிறுதிக்கு தகுதி!
இதை தொடர்ந்து இன்று (ஆகஸ்ட் 4) நடைபெற்ற அரையிறுதி போட்டியில் லவ்லினா போர்கோஹெய்ன், துருக்கி நாட்டை சேர்ந்த பூசெனஸ் சர்மினெலி என்பவரிடம் தோல்வியுற்று தங்கப்பதக்கத்துக்கான வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். இரண்டு முறை உலக சாம்பியனான லவ்லினா இதுவரை கலந்து கொண்ட போட்டிகளில் 14 வெற்றிகள் மற்றும் ஒன்பது தோல்விகளை பெற்றுள்ளார். ஆனால் துருக்கி வீராங்கனை புசெனாஸ் 25 வெற்றிகள் மற்றும் ஆறு தோல்விகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தற்பொழுது நடந்து முடிந்துள்ள இப்போட்டியில் புசெனாஸ் 5-0 என்ற கணக்கில் லவ்லினாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்துக்கான போட்டிக்கு முன்னேறியுள்ளார். அரையிறுதியில் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கல பதக்கத்துடன், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர்களான விஜேந்தர் சிங் மற்றும் மேரி கோம் ஆகியோருடன் 3 ஆவது நபராக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக மல்யுத்த வீரர்களான ரவி தஹியா மற்றும் தீபக் புனியா உள்ளிட்ட இந்திய வீரர்கள் காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.