பிரதமர் மோடி தலைமையில் 5G சேவை அறிமுகம்? தகவல் வெளியீடு!
நாட்டில் ஜியோ 5ஜி சேவை ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பிரதமர் மோடி தலைமையில் 5G சேவை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஜியோ 5ஜி சேவை:
ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் அதானி டேட்டா வொர்க்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை ஏலத்தில் பெற விரும்பினர். ஆனால், 5ஜி அலைக்கற்றையை முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஜியோ நிறுவனம் 1,50,173 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் பெற்றுள்ளது. இந்நிலையில், நாட்டில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ம் தேதி ஜியோவின் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது பிரதமர் நரேந்திர மோடி 5ஜி சேவையை வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்கி வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த விழா செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை மூன்று நாட்களுக்கு பிரகதி மைதானத்தில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் உலகளாவிய வீரர்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. மேலும், 5ஜி சேவை இந்தாண்டின் இறுதிக்குள் 20 முதல் 25 நகரங்களில் தொடங்கப்படும் என தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னா தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில் செப். 27 பிரம்மோற்சவம் – பக்தர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்கள்
மேலும், மற்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு 5G ஸ்டேக்கை ஏற்றுமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது. ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் 5ஜி அலைக்கற்றையை கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜியோ நிறுவனம் எரிக்ஸன், நோக்கியா, சாம்சங் ஆகிய முன்னணி நிறுவனங்களுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.