இன்று முதல் 3 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அசாம் மாநில அரசு 3 மாவட்டங்கள் மற்றும் ஒரு துணைப்பிரிவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்து உள்ளது. இந்த பகுதிகள் அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
அசாம் மாநில அரசு வெளியிட்டு உள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பிஸ்வநாத், மோரிகான் மற்றும் கோல்பாரா மாவட்டங்கள் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. COVID-19 நிலைமை மோசமடைந்துள்ளதால், அதனை சிறப்பாக சமாளிக்க அசாம் அரசு மூன்று மாவட்டங்கள் மற்றும் ஒரு துணைப் பிரிவிலும் முழு ஊரடங்கை ஒரு வார காலத்திற்கு அமல்படுத்தி உள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
தமிழக அரசின் பத்திரப்பதிவு கட்டணங்களை இனி இ-சேவை மூலமாக செலுத்தலாம்!
அதன்படி மளிகைக் கடைகளை தவிர இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் மூடப்படும். இதேபோல், அவசரகால வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்படுகிறது. மளிகை கடைகள் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு வார இடைவெளியில் இந்த நான்கு மாவட்டங்கள் மற்றும் துணை பிரிவுகளில் உள்ள ஒழுங்குமுறைகளை அரசாங்கம் இன்னும் கடுமையாக்கி வருகிறது.
TN Job “FB Group” Join Now
பிற பகுதிகளில் அதிகாலை 5 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறந்திருக்கும். நாடு முழுவதும் கடந்த மாதம் தினசரி 4 லட்சம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த புதிய தொற்று எண்ணிக்கை, தற்போது 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பயன்பாடே ஆகும். எனவே பொதுமக்களுக்கும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் விரைவில் கொரோனாவில் இருந்து மீளலாம்.
please nono school