வாடகை தாய் சர்ச்சையை தொடர்ந்து விபரீத முடிவை எடுத்த நயன்தாரா? ரசிகர்கள் கவலை!
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் செய்தி தான் சமீப காலமாக சமூக வலைத்தள பக்கங்களில் வலம் வருகிறது. இந்நிலையில் இவரை பற்றி வெளியாகிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா:
சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாயகியாக இருப்பவர் நயன்தாரா. இவரின் கணவர் மற்றும் இயக்குனரான விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. திருமணம் ஆகி வெறும் 4 மாதங்களில் குழந்தை பிறந்துள்ளதாக வெளியான செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Follow our Instagram for more Latest Updates
பின்னர் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது. இருப்பினும் வாடகை தாய் மூலம் குழந்தையை ஈன்றெடுக்க பல சட்ட சிக்கல்கள் உள்ளது. ஆனால் விக்னேஷ் சிவன் நயன்தாரா தம்பதி ஆறு வருடங்களுக்கு முன்னரே பதிவு திருமணம் செய்து கடந்த டிசம்பர் மாதம் வாடகை தாய் முறையில் ஒப்பந்த பதிவு செய்ததற்கான ஆதாரங்கள் முறையாக அளித்ததாகவும் தகவல் வெளியானது.
Exams Daily Mobile App Download
இருப்பினும் தற்போது வரை விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் இன்னும் விசாரணை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக நயன்தாரா தற்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லையாம். ஒரு சிலரால் நயன்தாரா தலைமறைவாகிவிட்டார் என கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து நயன்தாரா இது போன்ற சர்ச்சைகளில் சிக்குவது அவரின் ரசிகர்களுக்கும் கவலையை உண்டு செய்தது. ஆனால் தற்போது அட்லீ இயக்கும் ஜவான் படத்திற்காக நயன்தாரா ஹைதராபாத்தில் பிசியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.