குறைந்து வரும் ஊழியர் வைப்பு நிதி அமைப்பு பயனர்கள் – அறிக்கை வெளியீடு!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மாதம் தோறும் புதிதாக சேரும் பயனர்களின் எண்ணிக்கையானது அறிக்கையாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் மாத நிலவரம் வெளியாகியுள்ளது.
EPFO அமைப்பு:
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் மாதம் தோறும் ஊழியர்கள் தான் பெறும் ஊதியத்தில் இருந்து 12% செலுத்த வேண்டும். இதேபோல்,ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் அதே அளவிலான தொகையை ஊழியரின் EPF கணக்கில் செலுத்த வேண்டும். இந்த தொகைக்கு அமைப்பானது ஆண்டு தோறும் குறிப்பிட்ட அளவிலான வட்டி அளிக்கிறது. ஏப்ரல் 2018 முதல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தின் கீழ் ஊழியர்களின் மாநிலக் காப்பீடு (ESI) திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) போன்ற மூன்று முக்கிய திட்டங்களின் கீழ் சந்தா பெற்றுள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையைப் பயன்படுத்தி, செப்டம்பர் 2017 முதல் மாதம் தோறும் வேலைவாய்ப்பு தொடர்பான, புள்ளிவிவரங்களை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி, செப்டம்பர் 2017 முதல் ஆகஸ்ட் 2022 வரை, மொத்தம் 5,81,56,630 புதிய சந்தாதாரர்கள் EPF திட்டத்தில் சேர்ந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. செப்டம்பர் 2017 முதல், 7,22,92,232 புதிய சந்தாதாரர்கள் ESI திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மேலும், ஆகஸ்ட் மாதத்தில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் 65,543 சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநில முதல்வருக்கு சவுக்கடி – கோயிலில் வினோத வழிபாடு… மக்களின் நம்பிக்கை!
Exams Daily Mobile App Download
ஆகஸ்ட் மாதத்தில் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் மொத்தம் 986,850 பேர் சந்தா செலுத்தியுள்ளனர், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 11 சதவீதம் குறைவாக உள்ளதாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்