கடைசியாக தோற்று போன வெண்பா.. தாலி கட்டும் நேரத்தில் நின்ற திருமணம் – உச்சகட்ட பரபரப்பு!
விஜய் டிவியில் விரைவில் முடிவிற்கு வர இருப்பதாக சொல்லப்படும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவின் திருமணம் கடைசியாக நின்று விட்டது. கண்ணம்மா குடும்பத்துடன் வந்து வெண்பாவின் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
வெண்பாவின் திருமணம்:
பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியை வெண்பா திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட 10 வருடமாக காத்துக் கொண்டிருக்கிறார். பலமுறை பாரதி மற்றும் வெண்பாவின் திருமணம் மணமேடை வரை வந்து நின்றுள்ளது. அதேபோல், இந்த முறையும் பாரதியை மிரட்டி தாலி கட்டிக் கொள்ள வெண்பா முயற்சிக்கிறார். ஆனால் திருமண மண்டபத்தில் வெண்பாவை காணாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்கும் போது சாந்தியும் தன் மீது சந்தேகம் வராமல் இருக்க ஓவர் ஆக்ட்டிங் செய்கிறார்.
Exams Daily Mobile App Download
இதனை கவனித்த கண்ணம்மா உனக்கு தெரியாம உங்க வெண்பா அம்மா எங்கேயும் போக மாட்டாங்க? ஒழுங்கா வெண்பா எங்கே என்று சொல் என்று மிரட்டுகிறார். அப்போதும், சாந்தி பதில் சொல்லாமல் இருந்ததால், கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விடுகிறார். இதனால் வெண்பா, பாரதியை திருமணம் செய்ய தான் சென்றிருக்கிறார் என்ற உண்மையை சாந்தி சொல்லி விடுகிறார். இதனால் கோவமான கண்ணம்மா உடனே அந்த கோவிலுக்கு செல்கிறார்.
கோலாகலமாக நடந்த கயல் சீரியல் நடிகையின் வளைகாப்பு விழா – வாழ்த்துக்களை குவித்த ரசிகர்கள்!
Follow our Instagram for more Latest Updates
கண்ணம்மா உடன் சவுந்தர்யா, ஷர்மிளா என அனைவரும் செல்கின்றனர். அங்கே பாரதியை மிரட்டி, தாலி கட்ட ரெடி ஆகும் நிலையில், கண்ணம்மா சென்று சரியாக திருமணத்தை நிறுத்தி விடுகிறார். அதன்பிறகு, கோவிலில் இருக்கும் போதே DNA டெஸ்ட் ரிசல்ட் வர உள்ளது. இதனால் உண்மை தெரிந்த பாரதி கோவிலிலேயே கண்ணம்மா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க இருக்கிறார். இதற்கான எபிசோடுகள் அடுத்து வர உள்ளது.