இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு சராசரி ஆயுட்காலம் 2 ஆண்டுகள் குறைவு – சர்வதேச ஆய்வு மையம் தகவல்!
கொரோனா தொற்று பாதிப்புகள் தொடங்கிய பிறகு நாட்டில் பொதுவாக மக்களின் ஆயுட்காலம் 2 ஆண்டுகள் குறைந்துள்ளதாக சர்வதேச ஆய்வு மையம் ஆய்வினை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சராசரி ஆயுட்காலம்:
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் உகான் மாகாணத்தில் இருந்து முதல்முறையாக கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. கொரோனா தொற்று அதிவேகத்தில் பரவும் வகையை சேர்ந்ததால் சில மாதங்களில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் 2020ம் ஆண்டு தொடக்கம் முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் மிகவும் மோசமடைய தொடங்கியது.
PhonePe மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – பயனர்கள் அதிர்ச்சி!
அதன் பிறகு, 2021ம் ஆண்டு தொடக்கம் முதல் இரண்டாம் அலை பரவல் பாதிப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளது. இப்படி பல அலைகளாக கொரோனா வைரஸ் தொற்று தானாகவே உருமாற்றமடைந்து பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் சிரமமடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளது. கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் பணியில் மிகவும் உறுதுணையாக இருப்பது தடுப்பூசிகள் தான்.
கடந்த ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பையை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச மையம் கொரோனா பாதிப்பிற்கு பிறகான மக்களின் ஆயுட்காலத்தை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி, கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுட்காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
தீபாவளி சலுகை: குழந்தைகளுக்கு ஆர்கானிக் ஆடைகள், தமிழ்த் தறி தொகுப்பு – முதல்வர் அறிவிப்பு!
கடந்த 2019ம் ஆண்டு இந்தியாவில் ஆண்களின் சராசரி வயது 69.5 ஆகவும், பெண்களின் சராசரி வயது 72 ஆகவும் இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு இந்த விகிதம் ஆண்களுக்கு 67.5 ஆகவும், பெண்களுக்கு 69-8 ஆகவும் குறைந்து விட்டதாக ஆய்வு மையத்தின் பேராசிரியர் சூரியகாந்தி யாதவ் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பாதிப்புகள் சூழல் முழுமையாக குறைந்த பிறகு சராசரி ஆயுட்காலம் மீண்டும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.