தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – முதியோர்கள் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் கருவியில் உள்ள குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் முதியோருக்கு கைவிரல் ரேகை சில நேரங்களில் பதிவு வைக்க முடியவில்லை. இது தொடர்பான முக்கிய அறிவிப்பை மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
முதியோர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து அதிக முறைகேடுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக பயோமெட்ரிக் கருவியின் மூலமாக குடும்ப தலைவர் அல்லது உறுப்பினரின் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. பின்பு அதனை பயன்படுத்தி அந்தந்த ரேஷன் கார்டுகளுக்கு உறுப்பினர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்பட்ட பிறகே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் முறைகேடுகள் ஏற்படுவது குறைந்துள்ளது.
டிச. 24 முதல் ஜன.2 வரை விடுமுறை அறிவிப்பு – கிறிஸ்துமஸ் & புத்தாண்டு பண்டிகை எதிரொலி!
ஆனால் முதியோருக்கு இந்த முறை மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முதியோர்களின் கைவிரல் ரேகை பதிவு சரியாக விழாமல் மீண்டும் மீண்டும் கடைக்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தவிர்க்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக முதியோருக்கு கைரேகை வைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவர் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி கைரேகை பதிய வைக்க முடியாதவர்கள் மற்றும் முதியோர்கள் அவர்களுக்கு உரிய ரேஷன் கடைகளில் உரிய படிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – 5.24 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு!
அத்துடன் அந்த விண்ணப்பத்தில் கை ரேகை பதிவு வைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனை தற்போது தேனி மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளனர். அங்கு மொத்தம் 4 லட்சத்து 25 ஆயிரத்து 300 ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் நடப்பில் உள்ளது. இதில் 2 ஆயிரத்து 700 ஸ்மார்ட் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவுக்கு விலக்கு கேட்டு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அதனால் அவர்களுக்கு கை ரேகை வைப்பதில் இருந்து விலக்கு கொடுக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இது போன்று தங்களுக்கு சிரமமாக இருந்தால் அவர்களும் உரிய விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதன் மூலம் அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படும் என்று தேனி மாவட்ட வழங்கல் அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.