Post Office ல் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!
இந்திய அஞ்சல் துறை அண்மையில் சில திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதனால் கணக்குதாரர்களின் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் அதிக லாபம் தரும் சேமிப்பு திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
சேமிப்பு திட்டம்:
தபால் துறையின் மூத்த குடிமக்கள் திட்டம் 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது வயதான மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு சேமிப்புத் திட்டமாகும். இந்த சேமிப்பு திட்டத்தில் தபால் துறை வங்கிகளை காட்டிலும் கூடுதல் வட்டியை அளிக்கிறது. இதில் சேர விரும்புபவர்கள் வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். சிவில் ஊழியர்களுக்கு வயது 55 வயது இருக்க வேண்டும். குறைந்தபட்ச வைப்பு தொகையாக ரூ. 1,000 செலுத்தி கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் வட்டி விகிதம் 7.4 சதவீதமாக வழங்கப்படுகிறது. இதன் வட்டியானது காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு – உயர் நீதிமன்றம் வழங்கிய கால அவகாசம்!
அதனை தொடர்ந்து பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் நபருக்கு 7.1 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மேலும் மூத்த குடிமக்கள் திட்டத்தை போலவே வரிச் சட்டம், 1961, பிரிவு 80 C-யின் கீழ் வரிச் சலுகையும் வழங்கப்படுகிறது. அத்துடன் இத்திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது. வைப்புத்தொகைக்கான முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும் இருப்பினும் இடையில் பணத்தை எடுத்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகன்யா சம்ரிதி யோஜனா இது பெண் குழந்தைகளுக்கான பிரத்தியோக திட்டமாகும். பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதால் இதில் வரி விலக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 21 ஆண்டு முதிர்வு காலத்தை கொண்டது. இதில் குழந்தையின் கல்விக்காக 501% பணத்தை எடுத்து கொள்ளலாம். மீத தொகையை திருமணத்தில் போதும் பெறலாம். இந்த சேமிப்புத் திட்டம் காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு 7.6 சதவீத வட்டியை வழங்குகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்