மருத்துவமனையில் இருந்து வெளியான யாஷிகா ஆனந்த் புகைப்படம் – இணையத்தில் வைரல்!
நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்த கார் கடந்த சில வாரங்களுக்கு முன் மாமல்லபுரம் அருகே விபத்துக்குள்ளானது. அதில் படுகாயமடைந்த யாஷிகா தற்போது சிறிது சிறிதாக உடல்நிலை தேறி வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது
யாஷிகா ஆனந்த்:
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். அந்த நிகழ்ச்சியில் அவர் அனைத்து டாஸ்குகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்தார். அங்கு நடிகை ஐஸ்வர்யா உடன் நெருங்கிய நட்பை வளர்த்தார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னரும் இருவரது நட்பு தொடர்ந்தது. இந்நிலையில் யாஷிகா ஆனந்த் மாமல்லபுரம் அருகே தனது 2 ஆண் நண்பர்கள் மற்றும் தோழி வள்ளிசெட்டி பவானியுடன் காரில் அதிவேகமாக ஜூலை 25 ஆம் தேதி அன்று சென்று கொண்டிருக்கும் போது, கார் யாஷிகாவின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலை நடுவே இருந்த தடுப்பு சுவற்றில் மோதி உருண்டது.
மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் – மத்திய அரசு அறிவுறுத்தல்!
அதில் சம்பவ இடத்திலேயே யாஷிகாவின் தோழி பவானி உயிரிழந்தார். யாஷிகா அதிக காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மற்ற இரண்டு நண்பர்களும் இலேசான காயங்களுடன் தப்பினர். யாஷிகாவிற்கு இடுப்பு பகுதியில் பயங்கர அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரது தோழி குறித்து தகவல் தெரிந்ததும் உருக்கமான பதிவை இன்ஸ்டாவில் பதிவிட்டார். யாஷிகா முற்றிலும் குணமாக இன்னும் பல மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் ஒன்றை அவரது நண்பர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், தோழி இறந்த காரணத்தினால் ஒரு சிலர் அவரை மோசமாக திட்டி வருகின்றனர். அதிவேக பயணம் ஆபத்தில் தான் முடியும் என்பதற்கு யாஷிகா ஆனந்த் விபத்து எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.