பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு நமீதா மாரிமுத்து வெளியிட்ட புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து!
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கை நமீதா கலந்து கொண்டு வெளியேறியுள்ள நிலையில் அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருநங்கை நமீதா:
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் பல போட்டியாளர்கள் நன்கு அறிந்தவர்களாகவும், ஒரு சிலர் அறிமுகம் அற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இந்த முறை பல போட்டியாளர்கள் புது முகமாக இருந்தனர். பிரியங்கா, இமான் அண்ணாச்சி, பாவனி, ராஜு மட்டுமே அறிந்த முகங்கள். மற்ற அனைவருமே புதிதாக இருந்தனர். இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதல்முறையாக திருநங்கை போட்டியாளராக நமீதா கலந்து கொண்டார்.
விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
திருநங்கை நமீதா தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மிகவும் உணர்ச்சி பூர்வமாக கூறினார். அவர் பல கஷ்டங்களையும் கடந்து தற்போது மாடலிங் துறையிலும், அழகி போட்டிகளிலும் அதிக வெற்றிகளை குவித்து வருகிறார். நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களிடமும் நட்பு ரீதியாக பழகி வந்தார். திடீரென்று நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் எதனால் வெளியேற்றப்பட்டார் என்பதற்கான அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
பிக்பாஸ் வீட்டில் இருந்து நமீதா வெளியேறியதற்கான காரணம் இது தான் – அபிஷேக் வெளியிட்ட பதிவு!
ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளார். நமீதா சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் தான் நடத்தியுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அனைத்திலும் மிகவும் அழகாக உள்ளார் நமீதா. இதனால் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.