தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

0
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு - நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
தமிழக காவல்துறையினருக்கு முக்கிய உத்தரவு – நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தேர்தல்:

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு கடந்த மாதம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு கடந்த 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானது. இதனையடுத்து அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது . அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் அலுவலர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – தவறாமல் படிங்க!

மூன்று கட்ட தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். தேர்தல் நெருங்குவதை அடுத்து மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை அமல்ப்படுத்தியுள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் நாள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாட்களில் வாக்கு பதிவு மையத்திற்கு 5 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி பொது விடுமுறை – எங்கெங்கு தெரியுமா? முழு விபரங்கள் இதோ!

அதாவது தேர்தல் பணிகளில் ஈடுபடும் காவலர்கள் அரசியல் கட்சியினரிடம் உணவு வாங்கி சாப்பிடக் கூடாது. கள பணியில் உள்ள காவலர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் மூலம் நேரடியாக வழங்கப்படும். உணவு வர தாமதமானால் சொந்த பணத்தில் வாங்கி உண்ண வேண்டும். பிறகு அதற்கான ரசீதை காண்பித்து பணம் பெற்று கொள்ளலாம். மேலும் காவலர்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கு செல்லக்கூடாது. வாக்குப்பதிவு மையத்தில் அறிமுகமானவர்கள் யாரேனும் வந்தால் அவா்களிடம் பேசவோ, கைகள் மூலம் சைகை காட்டவோ கூடாது என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!