தமிழக அரசு ஓய்வதியதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – முதல்வரின் முடிவு?
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது குறித்து நடப்பு அரசிடமிருந்து முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளிவராததால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முடிவுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.
முதலமைச்சரின் முடிவு:
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தியது. பொதுவாக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. கடந்த ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பாக நிதி சிக்கல்கள் ஏற்பட்டதால் முன்னாள் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்தார். அந்த உத்தரவானது தற்போது அரசுப் பணியில் இருக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மற்றும் 2021 மே 31 ஆம் தேதி பணியில் இருந்து ஓய்வு பெறும் பணியாளர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் அம்சங்கள்!
ஓய்வு பெறும் போது அரசு ஊழியர்களுக்கு பண பலன்களை கொடுக்க முடியாமல் போனதால் வயது அதிகரிப்பு முறை ஏற்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 ஆக அதிகரிக்கும் என்று அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தற்போது ஆட்சி மாறியதால் இது தொடருமா என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு ஓய்வு பெறும் வயதை அதிகரித்தால் வருங்கால இளைஞர்களின் வாய்ப்பு மற்றும் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்பதால் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பாலமுரளிதரன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார்
இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர்க்கு ஓமைக்ரான் தொற்று உறுதி – மத்திய அரசு தகவல்!
பாலமுரளிதரன் போட்ட பொதுநல வழக்கு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அரசு ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதை நீடித்துக் கொண்டே சென்றால் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் போடப்பட்ட விதிமுறையை மாற்ற முடியாது என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது. ஜனவரி 5 ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதால் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.